அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் இந்திய தொழிலதிபருக்கு 25 ஆண்டு சிறைவாசம்?

Read Time:1 Minute, 41 Second

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் திரிபாதி (48). ஐடி நிறுவனம் நடத்தி வரும், இவர் கடந்த 2016ல் டேட்டிங் வெப்சைட் ஒன்றில் தன்னை பெரிய கோடீஸ்வரர் என்று விளம்பரம் கொடுத்தார். இந்த வெப்சைட் மூலம் 38 வயது பெண் ஒருவர் திரிபாதிக்கு அறிமுகமானார். உயர்ந்த பரிசு வழங்குவதாக கூறி, அந்த பெண்ணை டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்த அவர் அந்த பெண்ணை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் பெண்ணின் ஒரு கண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில், திரிபாதி மீது நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், தன் மீதான குற்றச்சாட்டை திரிபாதி மறுத்தார். அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் கூறினார். அதை நிராகரித்த நீதிமன்றம், திரிபாதியை குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் வரும் ஜூலை 18ம் தேதி தீர்ப்பு வழங்கபட உள்ளது. அதில், திரிபாதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்ற பிரதமர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கப்பட்டார்!!
Next post ஆணாக மாறும் பெண்கள் ஓர் வினோத கிராமம்!!(வீடியோ)