மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு!!

Read Time:1 Minute, 48 Second

மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது ?(மருத்துவம்)
Next post புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி !!