தயாரிப்பாளர் ஆனார் ஸ்ருதிஹாசன் !!(சினிமா செய்தி)
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதி ஹாசன் கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகளை ஏற்காமல் குறைத்து கொண்டுள்ளார். இசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வந்ததுடன் தனது பாய்பிரண்டுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். தற்போது விடுமுறை காலம் முடிந்து திரும்புவதுபோல் மீண்டும் படப் பணிகளில் கவனம் செலுத்துகிறார்.
இந்தியில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே தந்தை கமலுடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு முதல் கட்டத்தோடு நிறுத்தப்பட்டிருக்கிறது. 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும்போது அதில் ஸ்ருதி நடிக்க உள்ளார். இதற்கிடையில் அவர் சொந்த படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.
கடந்த 2015ம் ஆண்டே பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார் ஸ்ருதி. ஆனால் படம் எதுவும் தயாரிக்காமல் இருந்தார். தற்போது அதில் கவனத்தை திருப்பி இருக்கிறார். லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் ‘மஸ்கிடோ பிலாசபி’ படத்தை தயாரிக்க உள்ளார். இதில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.
Average Rating