கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரிக்க உள்ளோம்.
ஆகவே இன்றுமுதல் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்கு கிடைத்த, கிடைக்கும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு அனுப்பி வைக்கவும்.
[email protected]
[email protected]
**********************************
அமெரிக்காவின் நிïயார்க் நகரில் உம்ள 110 மாடி உலக வர்த்தக மைய கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். தரைமட்டமான அந்த இடத்தின் அருகே புதிய உலக வர்த்தக மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் தொடங்கும் காட்சி.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த மக்கள் சிக்குன் குனியா நோய் பரவாமல் இருக்க வேண்டி அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு பெண்கள் விளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.
ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஐதராபாத்தில் ரிக்ஷா தொழிலாளி வெள்ளத்தை கடக்கும் காட்சி.
இலங்கை அதிபர் ராஜபக்சே அணி சேரா நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள கிïபா சென்றுள்ளார். தனது மனைவி பலாத்துவா தந்தினாவுடன் அவர் ஹெலானா நகருக்கு சென்ற காட்சி.