துர்க்மேனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டம்!!( உலக செய்தி)
துர்க்மேனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தின் கீழ் எரிவாயு விலையை குறைப்பது தொடர்பாக இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துர்க்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டுவர ஒப்பந்தமிடப்பட்டு இந்த திட்டத்திற்கு நான்கு நாடுகளின் முதல் எழுத்தைக் கொண்டு டாபி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த பின் 2020-ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எரிவாயு இந்தியாவை அடையும்போது அதன் விலை 10 லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 10 புள்ளி 5 அமெரிக்க டாலராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை அதிகமாக இருப்பதால் அதனை குறைப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
Average Rating