டிப்ஸ்.. டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 28 Second

* மண்பானையில் வெண்ணெயை போட்டுக் காய்ச்சினால் சுவையான நெய் கிடைக்கும்.

* நெய் காய்ச்சிய மண்பானையில் சிறிது நெய்யுடன் கேழ்வரகு மாவு, வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து சிறுசிறு உருண்டைகள் செய்தால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சுவையுடன் சக்தியும் நிறைந்தது.

* மண்பானையில் பாலை காய வைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

* சிறு தானியங்களை மண்பானையில் சமைத்தால் சுவையாகவும், நன்றாகவும் இருக்கும்.
– சு.கண்ணகி, மிட்டூர்.

* வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் வதக்கல் செய்யும்போது அதில் இரண்டு ஸ்பூன் தக்காளி அரைத்த சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* பக்கோடா செய்யும்போது கறிவேப்பிலையைத் துண்டாக்கிப்போட்டு செய்தால் வாசனை அதிகமாக இருக்கும். அப்படியே சாப்பிடலாம்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

* எலுமிச்சம்பழத்தின் ஒரு மூடி மீதியாகி விட்டால், அதை அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

* குளியல் அறைக் கண்ணாடியில் புகை படிந்திருந்தால் சில வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணாடி மேல் வைத்து தேய்த்து விட்டு நியூஸ் பேப்பரினால் துடைத்து விடவும். கண்ணாடி ‘பளபள’வென மின்னும்.
– ஜெ.சி.ஜெரினாகாந்த், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை-97.

* பாகற்காயை உப்பு சேர்த்து, சிறிது நேரம் வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு வதக்கினால் அதிக கசப்பு இருக்காது.

* தாய்ப்பால் சரியாக சுரக்காத தாய்மார்கள் உணவில் அடிக்கடி அகத்திக்கீரையை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.

* எந்த காய் அல்லது வற்றல் போட்டு மோர்க்குழம்பு செய்தாலும் இறக்கிய பிறகு அதில் தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தை தாளித்துக் கொட்டுங்கள். குழம்பின் வாசனை ஊரையே தூக்கியடிக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* ரசத்தை அடுப்பிலிருந்து இறக்குமுன் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.

* இஞ்சியை மைய அரைத்து எண்ணெயில் வதக்கி கோஸை அதில் போட்டு புரட்டினால் வாசத்துடனும் சுவையுடனும் இருக்கும் பொரியல்.

* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவையானபோது தோசை மாவில் 2 ஸ்பூன் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.

* புதினா சட்னி செய்யும்போது ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலும் சிறிது வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
– வசந்தா மாரிமுத்து, சென்னை-64.
* பால் பாக்கெட் வாங்கி அதை காய்ச்ச நேரம் இல்லாமல் போனால், அந்த பாக்கெட்டை தண்ணீரில் போட்டு வைத்தால் நான்கு மணி நேரம் கெடாமல் இருக்கும்.

* பருப்புப்பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்புக்கூட்டு கெட்டியாக இருக்கும்.
– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* மஞ்சள் முள்ளங்கியை சமைக்கும்போது அவற்றுடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் வாசனையுடன், சுவையாக இருக்கும்.

* காய்கறிகள் வாடாமலிருக்க, அவற்றை எலுமிச்சைச்சாறு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக இருக்கும்.

* தோசை மாவுடன் அரை கப் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசை வார்த்தால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.

* வெள்ளைக் கரிசலாங்கண்ணிப் பொடியை உண்டு நீர் பருகினால் முடிநரை நீங்கும். பார்வை தெளிவு பெறும்.

* புதினா கீரையைப் பொடித்து பல் துலக்கும்போது ஈறுகளில் உள்ள நீர் வெளியேறும். அகத்திக்கீரை உண்டு வருவதால் உடமிலுள்ள நச்சுக்கள் நீங்கும்.

* பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* ஃபிரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் பொருட்கள் நன்கு உலர்ந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கு கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. அது அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினிய காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருள் காயிலில் பட்டு உள்ளிருக்கும் காஸ் வெளிப்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

* பயன்படுத்திய மாத்திரைகளின் அலுமினிய பாயிலை பாத்திரத்திலுள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்குகளைத் தேய்க்கப் பயன்படுத்தலாம். இவை கீரலை உண்டுபண்ணாது.

* பருப்பு வேகும்போது அதில் சிறிது பட்டையை சேர்த்தால் குழம்பு வெகு நேரம் கெடாமல் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

* ரவா உப்புமாவில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் கொஞ்சம் தேங்காயும், சின்ன தக்காளியையும் வைத்து அரைத்து கொதிக்கும் நீரில் கலந்து செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

l வெந்தயத் தோசைக்கு கொத்துமல்லித்தழை சேர்த்து அரைத்து சுட மிகவும்
சுவையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80’s தமிழ் நடிகைகளின் நிஜ மகள்கள் !!( வீடியோ)
Next post உயிரைப் பறித்த சுய மருத்துவம்!!(மருத்துவம்)