போதைப்பொண்ணு மிஷ்டி! (சினிமா செய்தி)
‘செம போத ஆகாத’வில் அதர்வாவின் காதலியாக கவர்ந்திழுத்தவர் பெங்காலி பொண்ணு மிஷ்டி. நம் பக்கத்து woodகளில் படங்கள் பண்ணின அனுபவத்தோடு தமிழுக்கு வந்த ஒரிஜினல் பெங்காலி ரசகுல்லா.‘‘நான் கோலிவுட் வந்ததே, சுவாரஸ்யமானது. பெங்காலியில் நான் அறிமுகமான படம், ‘பொரிசோய்’. அதோட இயக்குநர் ரூபாலி குஹாவும் ‘செம போத ஆகாத’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் சாரும் நல்ல நண்பர்கள். அவங்க மூலமாகத்தான் தமிழுக்கு வந்தேன். சொந்த ஊரே மேற்கு வங்காளம்தான். மாடலிங் டூ சினிமா ட்ராவல்.
என்னோட இரண்டாவது படம் பாலிவுட்ல சுபாஷ்கையோட ‘காஞ்சி’யில் நடிச்சேன். என்னை டோலிவுட் வரை கொண்டு சேர்த்த படம் அது. அங்கிருந்து மலையாளம், கன்னடம்னு தென்னிந்திய மொழிப்படங்கள் கிடைச்சது. தமிழ் இண்டஸ்ட்ரியில் ஒர்க் பண்ணினது இனிமையான அனுபவம். இப்ப என் குட்புக்ல பத்ரி சாரும் இருக்கார்’’ எனச் சொல்லும் மிஷ்டி, அடுத்து இந்தியில் கமிட் ஆகியிருக்கிறார்.
Average Rating