திருமணம் பற்றி யோசிக்கவில்லை : சொல்கிறார் நடிகை நமீதா புரமோத் !!(சினிமா செய்தி)
தமிழ் நடிகை நமீதா போல் மலையாளத்திலும் நமீதா என்ற பெயரில் ஒரு நடிகை நடித்து வருகிறார். இவரது முழுபெயர் நமீதா புரமோத். இவரும் தமிழில் என் காதல் புதிது, நிமிர் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரைபற்றி கிசுகிசு பரவியது. அதைக்கண்டு கோபம் அடைந்த நமீதா புரமோத் சம்பந்தப்பட்ட மீடியாக்களை திட்டி தீர்த்தார். அவர் கூறியதாவது: திரையுலகில் ஏதாவது பிரச்னை எழும்போது அதில் என்னுடைய பெயரும் தவறாமல் இணைத்து எழுதப்படுகிறது.
எந்தவொரு விஷயத்தையும் உலகுக்கு எடுத்துச் சொல்வது மீடியாக்கள்தான். ஆனால் அவர்கள் அதில் நியாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஏதாவது ஒரு தகவல் எழுதுவதற்கு முன்பு அதுபற்றி அதிகாரப்பூர்வமாக விசாரித்துவிட்டு அதில் உண்மையிருந்தால் எழுதலாம். ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் எதையாவது எழுதக்கூடாது. என் பெயரை ஏன் வம்படியாக இழுக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
ஆனால் எனது குடும்பத்தினர் ஆதரவுதான் என்னை ஆறுதலடைய வைத்திருக்கிறது. தற்போது நான் திருமணம்பற்றி எண்ணிப்பார்க்கவில்லை. திருமணத்துக்கு பிறகு எந்த பெண்ணும் அவரது கணவரின் மீது கவனம் செலுத்த வேண்டும். எனவேதான் எனது திருமணத்தை இன்னும் 3 வருடத்துக்கு செய்வதாக இல்லை. இவ்வாறு நமீதா புரமோத் கூறினார். நடிகை ஒருவர் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் இணைத்து கிசுகிசு வெளியிட்டிருந்ததே நமீதா புரமோத்தின் கோபத்துக்கு காரணம்.
Average Rating