ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 44 Second

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம், தகாப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது அல்மாஸ்கேல் என்ற கிராமத்தில் ஒரு பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்தது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த மாவட்டத்தில் பல இடங்களிலும் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றது. இதில் அல்மாஸ்கேல் கிராமத்தில் பத்ராப் பகுதியில் ஒரு பீரங்கி குண்டு விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என அவர் குறிப்பிடவில்லை என தகாப் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி முகமது நயீம் சபி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமான அபிராமி ! வெளியான அதிர்ச்சி ஆடியோ !!(வீடியோ)
Next post வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்!!(உலக செய்தி)