நடிகை உறுப்பு தானம் அறிவிப்பு : ரசிகர்கள் அதிர்ச்சி !!(சினிமா செய்தி)
கம்பீரம் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் என் சகியே, முத்திரை போன்ற படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன், பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். ராக்கி சாவந்த் அவ்வப்போது அதிரடியாக பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்துவதுண்டு.
இந்தி டிவி நடிகை பிரத்யூஷா பேனர்ஜி மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டபோது மின்விசிறிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததுடன் இதன்மூலம் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்யும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவித்திருந்தார். தற்போது மற்றொரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் கண் தானம் செய்திருக்கின்றனர். அவர்களை பாராட்டியிருக்கும் ராக்கி சாவந்த் கூறும்போது, ‘உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியமானதாகும். இதை எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். அதன்மூலம் பலர் பலன் அடைவார்கள். பலரும் உறுப்பு தானம் செய்வதை கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன். அவர்களைப்போல் நானும் உறுப்பு தானம் செய்ய எண்ணினேன். எனது மார்பகத்தை நான் தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். என்னிடம் தானம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை’ என்றார்.
Average Rating