வாலிபர்களுக்கு மொட்டை அடித்த பொலிஸ் அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம் !!(உலக செய்தி)

Read Time:1 Minute, 57 Second

கோவை பொள்ளாள்சி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்குள்ள கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18), நிதிஷ் (20). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை அருகில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றனர்.

அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதை கவனித்த மீனாட்சிபுரம் இன்ஸ்பெக்டர் வினோத் வாலிபர்களை பிடித்து கண்டித்தார். இது தவிர அவர்களை ஜீப்பில் ஏற்றி அருகில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துக்சென்று மொட்டை அடிக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்கு பயந்த வாலிபர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் வினோத் சென்றதும் வாலிபர்கள் பாலக்காடு பொலிஸ் சூப்பிரண்டு தேபெஸ்குமார் பெகராவிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக வாலிபர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் வினோத் பொலிஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அத்துமீறி நடந்தது சட்டவிரோதம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றும் மர்மங்கள் விலகாத 5 சி.சி.டி.வி கேமரா பதிவுகள் !(வீடியோ)
Next post இன்றும் மர்மங்கள் விலகாத 4 சி.சி.டி.வி கேமரா பதிவுகள் !(வீடியோ)