ஜனாதிபதி உலகத் தலைவர்களுடனும், பிரதிநிதிகளுடனும் சந்திப்பு
Read Time:1 Minute, 7 Second
ஐக்கிய நாடுகள் சபையின் 61வது அமர்வில் பங்கேற்கும் பொருட்டு நிவ்யோக் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலகத் தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார் .ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் சிறுவர் உரிமை, சிறுவர்களை யுத்தத்துக்கு சேர்த்துக் கொள்வது தொடர்பான விசேட பிரதிநிதியுமாகிய ராதிகா குமாரசாமியுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலை நடாத்தினார்.
புலிகள் தொடர்ச்சியாக சிறுவர்களை இணைத்துக் கொள்வதை தடுப்பதற்கு ஐ.நா. சபை விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி இச்சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.