கோமாரி களுகொல்ல பகுதியில் சம்பவம்
Read Time:53 Second
கோமாரி களுகொல்ல பகுதியில் நேற்றுமுன்தினம்இடம்பெற்ற கிரேனேட் வீச்சில் மூன்றுபேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில், உணவருந்திக் கொண்டிருந்த ஆரியசேன (வயது.60), ஏ.எம்.சாந்த (வயது.35), தயானந்த (வயது.45) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
கடல்கோளினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மீதே வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த கிரேனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொனராகலையைச் சேர்ந்த இம்மூவரும் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மொனராகலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.