ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 26 பேர் பலி
Read Time:57 Second
பாக்நாத் நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் அரசு படைக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் எதிராக தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ரம்ஜான் நோன்பு தொடங்க இருப்பதால் தாக்குதல் அதிகரிக்லாம் என்று அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந் நிலையில் பாக்தாத் நகரில் கிழக்கு பகுதியில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சத்ர் நகரில் கார் குண்டு தாக்குதல் நடந்தது. இதில் 26 பேர் பலியானார்கள். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.