வாடகைத் தாய் ஏ டூ இசட்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 40 Second

‘‘மேலோட்டமாகப் பார்த்தால், நவீன மருத்துவத்தின் உச்சக்கட்ட சாதனையாகத் தெரியலாம். ஆனால், வாடகைத் தாய் சிகிச்சை முறை இதிகாச காலத்திலேயே இருந்திருக்கிறது எனத் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். தேவகி கர்ப்பமான போது, அவரது கர்ப்பத்தால், அவரது அண்ணனுக்கு ஆபத்து எனத் தெரிந்து, அந்தக் கருவானது ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் போனதையும், பலராமன் பிறந்ததையும் பற்றி இதிகாசத்தில் படித்திருப்போம். கருவானது ஒரு கர்ப்பப் பையிலிருந்து இன்னொரு கர்ப்பப் பைக்குப் போகிற அதே கான்செப்ட்தான் வாடகைத் தாய் முறை…’’

புதுமைத் தகவல் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற விரும்புவோருக்கான நடைமுறை ஆலோசனைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.

‘‘ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் கருவைத் தாங்கும் சக்தி இல்லாத போதோ அல்லது கர்ப்பப் பை நீக்கப்பட்டிருந்தாலோ, சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற வைக்க முடியாது என்கிற நிலையிலோ வாடகைத் தாய் முறைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். மனைவியின் கருமுட்டையையும், கணவரின் உயிரணுவையும் இணைத்துக் கருவாக்கி, இன்னொரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்த்து, குழந்தையை வெளியே கொண்டு வருகிற முறையே வாடகைத் தாய் சிகிச்சை.

வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் திருமணமாகி, ஒரு குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். அவரது கணவரின் அனுமதிக் கையெழுத்து அவசியம். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். கருவைத் தாங்கும் சக்தி உண்டா, நீரிழிவு, ரத்த அழுத்தம், இன்ஃபெக்ஷன், மரபணுக் கோளாறுகள் ஏதும் உள்ளனவா எனப் பார்க்கப்படும். அதையடுத்து அந்தப் பெண்ணின் கணவருக்கும் சில சோதனைகள் எடுக்கப்படும். அதன்பிறகுதான் அந்தப் பெண் வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர் என முடிவு செய்யப்படும்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்த பெண் மற்றும் அவரது கணவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். சிகிச்சை ஆரம்பித்த நாள் முதல், குழந்தையைப் பெற்றுக் கையில் ஒப்படைக்கிற நாள் வரை வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கிற பெண்ணின் உணவு, இருப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் குழந்தை வேண்டும் தம்பதியர்தான் ஏற்க வேண்டும். தவிர வாடகைத் தாய்ப் பெண்ணுக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டிய பொறுப்பும் அவர்களுடையதே…

அந்தப் பெண்ணுக்கு ஏற்படுகிற எல்லாப் பிரச்னைகளுக்கும், அதற்கான செலவுகளுக்கும் அந்த தம்பதியரே பொறுப்பேற்க வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் சுமப்பது இரட்டைக் குழந்தைகள் என்றால் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கும். வாடகைத் தாய் சிகிச்சை பெற விரும்புவோர் அதற்கான ஏஜென்சிகளை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம். வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் முதலில் மருத்துவர் கவுன்சிலிங் செய்வார். கர்ப்ப காலம் முழுவதையும் பற்றி விளக்குவார்.

வெளிநாட்டில் வாடகைத் தாய் சிகிச்சைகள் காஸ்ட்லியானவை என்பதால் இப்போது வெளிநாட்டவர் பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பி, இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் வெளிநாட்டுத் தூதரகம் மூலம் பதிவு செய்தே இந்த சிகிச்சையைப் பெற முடியும். பிரபலங்கள் பலரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிற செய்திகளைக் கேள்விப்படுகிறோம். நம்மூரைப் பொறுத்தவரை குழந்தை பெற இயலாத காரணத்துக்காக மட்டுமே இது அனுமதிக்கப்படும். மற்றபடி குழந்தை பெற்றுக் கொள்ள நேரமில்லை என்பது போன்ற காரணங்களுக்காக வாடகைத் தாய் முறையை அனுமதிப்பதில்லை…’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலாராஜ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்!! (மகளிர் பக்கம்)