பிரதமர் மீது முட்டை வீசிய பெண் !! (உலக செய்தி )

Read Time:1 Minute, 25 Second

அவுஸ்திரேலியாவில் வருகிற 18 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி என்ற இடத்தில் கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரதமர் மாரிகன் தலை மீது முட்டையை வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை அவரது தலையில் உடையவில்லை. தரையில் விழுந்து நொறுங்கியது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் அப்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் அவர் எதற்காக அந்த காரியத்தில் ஈடுபட்டார் என்ற தகவலை வெளியிடவில்லை.

அதே நேரத்தில் தனது அரசியல் எதிரிகள் இத்தகைய தாக்குதலில ஈடுபட்டதாக மாரிகன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? (கட்டுரை)
Next post மக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர்!! (வீடியோ)