தைவான் நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 21 Second
ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 24ம் திகதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஆசிய நாடான தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் பெருமளவில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கும் புற்றீசல் போல் ஓரின சேர்க்கையாளர்களின் சங்கங்கள், அமைப்புகள் பல தோன்றி அவர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்’ என்று கடந்த 2017ம் ஆண்டு அரசை எச்சரித்த தைவான் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரிக்க அறிவுறுத்தியது.
இந்நிலையில் தைவான் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பின் போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமண மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Average Rating