பாக்தாத் நகரில் ஊரடங்கு
Read Time:39 Second
இராக் தலைநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாக்தாத்தில் இன மோதல்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த அமெரிக்க மற்றும் இராக்கிய ராணுவத்தினர் விரிவான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்கு வசதியாகவே ஊரடங்கு அமல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.