தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 580 பேருக்கு கொரோனா!! (உலக செய்தி)
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 516 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 35 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 547 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
Average Rating