ஈராக்கில் உணவில் விஷம் :7 போலீசார் பலி

Read Time:1 Minute, 4 Second

irak.flag.jpgஈராக் நாட்டில் நுமானியா என்ற நகரில் உள்ள ராணுவ முகாமில் தங்கி இருந்த போலீசாருக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததால் அதைச்சாப்பிட்ட 7 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த முகாமில் உள்ள ராணுவஅதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஹாசன் நிமா கூறுகையில் இந்த முகாமில் உள்ள 2 ஆயிரம் போலீஸ்காரர்களில் ஆயிரத்து 350 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுபற்றி விசாரிப்பதற்காக ஒரு குழுவை அனுப்பி வைத்து இருப்பதாக சுகாதார அமைச்சரக அதிகாரி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அணு ஆயுதம்: வட கொரியா விதிக்கும் நிபந்தனை
Next post திருகோணமலை புல்மோட்டையில் தொழில்பேட்டை அமைக்கும் பாரிய திட்டம் இன்று அமைச்சில் ஆராய்வு