சாம்பியன் கோப்பை கிரிக்கெட்: இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி

Read Time:1 Minute, 37 Second

Cricket,1.jpgசாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஜிம்பாப்பே ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இருந்து 2 அணிகள் பிரதான சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுவரை 4 போட்டிகள் முடிந்து உள்ளன. இதில் இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளன. இதன் மூலம் 2 அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.

வங்காள தேசம், ஜிம்பாப்வே இரு அணிகளும் இது வரை சந்தித்த இரு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்து விட்டன. இனி அவை தலா ஒரு போட்டியில் மட்டுமே விளையாட உள்ளன. இந்த இரு அணிகளும் நாளை ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. இதில் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. வெற்றி பெற்ற அணி 3-வது இடத்தை பிடிக்கும்.

அடுத்து 14-ந் தேதி மும்பையில் இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தகதி சுற்று போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈபிடிபி அமைப்பின் ஊடகங்களுக்கான அறிக்கை
Next post போர் கைதிகளாக பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் இலங்கை அரசு குற்றச்சாட்டு