இலங்கை கடற்படை தாக்குதல்: விடுதலைப்புலிகளின் படகு மூழ்கடிப்பு- 4 பேர் பலி
Read Time:42 Second
இலங்கை-இந்தியா கடற் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு மீது இலங்கை கடற்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் விடுதலைப்புலிகளின் படகு மூழ்கி விட்டது. அந்த படகு தீப்பிளம்பாக வெடித்து சிதறியது. இதில் அந்த படகில் இருந்த விடுதலைப்புலிகள் 4 பேர் பலியானர். இதற்கு பதிலடியாக இன்று வவுனியா பகுதியில் 3 சிங்களர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர்.