பாகிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி
Read Time:44 Second
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா அருகே குஸ்தார் என்ற இடத்தில் ஒரு மசூதிக்குள் ஆயுதம் தாங்கிய 4 பேர் நுழைந்தனர். அவர்கள் அங்கு தொழுகை நடத்திய 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சேக்ரி என்ற பழங்குடி இனத்தைச்சேர்ந்த 2 குழுக்களுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது என்று போலீசார் கூறினார்கள். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.