ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: விடுதலைப்புலிகளை பழிவாங்க ராணுவம் அதிரடி தாக்குதல்
விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி 103 கடற்படையினரை கொன்றதை தொடர்ந்து இலங்கை விமானங்கள் விடுதலைப்புலிகளின் முகாம்கள், தமிழர் கிராமங்களில் தொடர்ந்து குண்டு வீசிதாக்குதல் நடத்தி வருகிறது.இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து சம்பூர் பகுதியை பிடித்த சிங்கள ராணுவம் மேலும் சில பகுதிகளை பிடிக்க தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று திரிகோணமலை மாவட்டத்தில் உள்ளமுகாமில் இருந்து கடற்படை வீரர்கள் பஸ்களில் திகம்பத்தை என்ற கிராமத்துக்கு வந்து கொண் டிருந்தனர்.
அப்போது விடுதலைப் புலிகளின் தற்கொலை படை வீரர்கள் வெடிகுண்டு நிரப்பிய லாரியுடன் அந்த பஸ்களுக்கு கிடையே புகுந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் பஸ்கள் வெடித்து சிதறின. அதில் இருந்த கடற்படையினர் 103 பேர் உடல் சிதறி பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விடுமுறையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின்இந்த அதிரடி தாக்குதல் இலங்கை ராணுவத்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே 3 நாட்களுக்கு முன் விடுதலைப்புலிகளின் அதிரடி தாக்குதலில் 129 இலங்கை ராணுவத்தினர் பலியானார்கள். இலங்கை ராணுவத்துக்கு தொடர்ந்து பலத்த அடி கிடைத்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை ராணுவம் தமிழர் கிராமங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ விமானங்கள் நேற்று வடக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது.