துப்பாக்கிச்சூட்டில் மாணவன் பலி
Read Time:55 Second
அநுராதபுரம் எலபத்துவ பகுதியில் வேட்டையாடச் சென்ற நபரொருபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார் தனது சகோதரனுடன் காட்டுக்குச் சென்று கஜூ பறித்துக் கொண்டிருந்த 16வயது மாணவனே இவ்வாறு கொல்லப்பட்டார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் வேட்டைக்கு வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே மாணவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating