கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
Read Time:54 Second
மேல் மாகாணசபைத் தேர்தல் தினத்தன்று கொழும்பு புறநகர்ப் பகுதியான கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேச வீடொன்றில் இருந்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருடன் 9மி.மீற்றர் ரக கைத்துப்பாக்கியொன்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலியானது தெரிந்ததே.
Average Rating