கல்முனையில் நகை வியாபாரி குத்திக்கொலை
கல்முனையை சேர்ந்த நகைவியாபாரியான அஹமது லெப்பை றபீக்தீன் வயது38 என்பவரே இனந்தெரியாத ஆயுததாரிகளினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான கல்முனைக்குடியை சேர்ந்த அஹமது லெப்பை றபீக்தீன் என்பவர் நேற்ற முன்தினம் பி.ப சம்பாந்துறை பிரதேசத்துக்கு நகைகொள்வனவு செய்வதற்காக பணத்துடன் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பாத நிலையில் நேற்றுக்காலை சம்பாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்கம்பிட்டி வீதி அல்லிமுலை சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1½மாதத்திற்கு முன்பும் சம்பாந்துறை பிரதேசத்திற்கு நகை வியாபாரத்திற்கு சென்ற 2நபர்கள் கூறிய ஆயுதங்களால் தாக்கபட்டு மரணம் அடைந்தமை குறிப்பிடதக்கது இந்நிகழ்வைத் தொடர்ந்து கல்முனை நகர வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating