தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்
Read Time:1 Minute, 6 Second
தமிழ்ப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களால்க்கூட செல்லமுடியாத நிலையிருப்பதாக இந்தியப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ தாம் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லையெனக் கூறிய அவர், நீதியற்றமுறையில் பாரபட்சமாக தாங்கள் நடத்தப்படுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருக்கும் பொதுமக்கள் வாழ்வதற்கான உரிமையை இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது தாம் கோரியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
Average Rating