புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கம் -பாதுகாப்புப் பேச்சாளர்

Read Time:1 Minute, 20 Second

புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கப் பட்டுள்ளதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது தற்போதுள்ள சூழ்நிலையில் செயற்படுத்த முடியாது. இருந்தபோதும் அரசாங்கம் மேற்கொண்டு வருவது மனிதாபிமான யுத்தமென்பதால் அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது. எனினும் இந்தக் காலப்பகுதியில் பாரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் படையினருக்கு எவ்வித சிரமமும் இல்லை. அத்துடன் புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நிராகரித்ததையடுத்து கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஏழு தற்கொலைப் படையினரை புலிகள் அனுப்பி வைத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை
Next post 13வயது சிறுமிக்கு அசிட்டை குடிக்க கொடுத்தவர் கைது