புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது – மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்
இராணுவ பலத்தால் இலங்கை இனப்பிரச்சனையில் வெற்றி காணலாம் ஆனால் தீர்வு காண முடியாது தற்போதைய சு10ழ்நிலையில் விடுதலைப் புலிகளின் விளையாட்;டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து ப.சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது இலங்கைப் பிரச்சனையால் அங்கிருந்து பெறுமளவில் அகதிகள் வருவர்கள் என நான் நினைக்கவில்லை சிலர் வரலாம் அதை அரசு சமாளிக்கும் நமது கவலைகள் எல்லாம் யுத்தம் நிற்க வேண்டும் என்பதுதான் மனிதக் கேடயமாக அப்பாவிகளை பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அப்பாவி மக்களை இலங்கை அரசு பயன்படுத்தக் கூடாது இந்தக் கவலைகள் உரிய முறையில் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது இந்த கவலைகள் குறித்து இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காஇ இங்கிலாந்துஇ ஜரோப்பிய யூனியன் மற்றும் உலகசமுதாயம் தொடர்ந்து கூறி வந்தன ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட மறுத்து வந்தனர் இலங்கையும் தாக்குதலை நிறுத்த முடியாது என பிடிவாதம் பிடித்து வந்தது இரண்டு பேரிலும் அதிக தவறை செய்தது இலங்கை அரசுதான் இராணுவத்தைக் கொண்டு வெற்றி காணலாம் என அவர்கள் முடிவு செய்து விட்டனர் இராணுவ hPதியாக தீர்வு காணலாம் ஆனால் நிரந்தர வெற்றி பெற முடியாது இராணுவ நடவடிக்கையின் அடிப்பi;டயில் விடுதலைப் புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா? இல்லையா? என்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது மனித உயிர்கள் இப்படி நாம் அனுமதிக்க முடியாது அதற்கு மேல் இப்போதைக்கு நாம் எண்ணவேண்டிய அவசியம் இல்லை பிரபாகரனுக்கு நாங்கள் கெடுதல் நினைக்கவில்லை ஆனால் அவர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என விரும்புகிறோம் இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்கிறது என்று சிலர் கூறுகின்றனர் அது தவறு அப்படி எதையும் இந்தியா செய்யவில்லை என்றார்.
Average Rating