புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்
Read Time:1 Minute, 19 Second
புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் சிவிலியன்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுக்கும் வேண்டுகோள்:- துரதிஷ்டவசமாக போர் தவிர்ப்பு வலயத்தில் இன் னும் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற சொல்லொண்ணா கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். எல்.ரீ.ரீ.ஈ.யினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உங்களை மனிதக் கேடய ங்களாகப் பயன்படுத்துகின்றமையினால், உங்கள் கஷ்டங்கள் நீடித்துக்கொண்டே போகின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வேண்டுகின்றேன். உங்கள் ஒவ்வொருவருடைய பாதுகாப் பிற்கும், நலனோம்பலுக்கும் ஆகக் கூடிய முன்னுரிமையை எனது அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating