மாத்தளையில் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்

Read Time:2 Minute, 0 Second

சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மாத்தளையின் மாத்தளை மாவட்டம் இறத்தோட்டை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் பாட்டனாரே மேற்படி முறைப்பாட்டைச் செய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இறத்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் மேற்படி சிறுமி பள்ளேதன்ன பகுதியைச் சேர்ந்தவராவார். கடந்த 27ம் திகதி பாடசாலைக்கு சென்றவர் மறுநாள் இரவு பத்து மணியளவிலேயே வீடு வந்து சேர்ந்துள்ளார். கொக்கோவத்iதைப் பகுதியிலிருந்து ஆட்டோஒன்றில் தன்னைக் கடத்திச் சென்ற ஒருவர் வீடொன்றில் வைத்து தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வீட்டாரிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடத்திச் சென்ற நபரின் பெயரைத் தவிர வேறெந்த தகவலும் தெரியவில்லை. மேற்படி சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார். இறத்தோட்டை பொலீஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தயா குமாரசிங்க தலைமையிலான குழுவினர் சந்தேகநபரைத் தேடிப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளை சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடையார்கட்டு தேடுதலில் பெருந்தொகை ஆயுதம் மீட்பு
Next post ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு