பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 30 Second
மினுவாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டள்ளார். மறைத்துவைக்கப்பட்டிருந்த கைகுண்டொன்றை பொலிஸார் மீது வீச முயன்ற முற்பட்டபோது தற்பாதுகாப்பிற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார். கம்பஹா மினுவாங்கொடை உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற கொலை கொள்ளை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதால உலக கும்பலைச்சேர்ந்த இவர் கடந்தவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். தனது ஆயுதங்கள் சில மினுவாங்கொடையில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்;தேக நபர் கூறியதையடுத்து பொலிஸார் அவரை அவ்விடத்திற்கு கூட்டிச்சென்றனர் இதன்போது புதைக்கப்பட்டிருந்த பொலிஸார் மீது வீசமுற்பட்டதாகவும் இதன்போது தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரவிக்கப்படுகிறது.
Average Rating