மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்கிறது
Read Time:1 Minute, 14 Second
மட்டக்களப்பின் நகரைச் சுற்றியுள்ள சுமார் 25 பாடசாலைகளில் இன்று 9வது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ரிஎம்விபி ஆயுதக்குழுவால் கப்பம்கோரி பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா கொலை செய்யப்பட்டமையை கண்டித்தே இந்தபோராட்டம் நடத்தப்படுகிறது. இதேவேளை குற்றவாளிகள் சமூகத்திற்கு முன்னால் கொண்டு வரப்பட்டால் அது தமக்கு பிரச்சினையை கொடுத்து விடும் என்பதற்காகவே காவல்துறையினர் சந்தேகநபர் மூவரையும் சுட்டுக் கொண்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் கடந்த ஏப்ரல் 28ம்திகதிஅன்று குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கப்பம் கோரப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பின்னர் பாழுங்கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
One thought on “மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்கிறது”
Leave a Reply
You must be logged in to post a comment.
சிங்கள மக்களும் அரசும் தமது நல்லெண்ணங்களை காட்டி தமது இனக்கலாச்சாரத்தை உயர்த்திவிடடனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தால் தமிழர்கள் தாழ்த்தப்பட்டுள்ளனர்