முகத்துவாரம் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 15 Second
முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இனம்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷன் யோகேஸ்வரன் என்ற 32வயதான இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் என்று தம்மை அடையாளப்படுத்திக ;கொண்ட சிலரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தச்சம்பவத்துடன் இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார் அத்துடன் நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் நடைபெறுமன குறிப்பிட்ட காவல்துறையினர் விசாரணைகளை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
Average Rating