புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவில் கைது
Read Time:1 Minute, 1 Second
புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் சரமோசா மோல்;ட் பகுதியில் வைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் மூன்றுபேரைக் பொலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும், ஏனைய போராட்டங்களில் ஈடுபட்ட இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஐம்பத்திற்கும் அதிகமானவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு சரமோசா மோல்;ட் நகர முதல்வர் டொனி இஸா வலியுறுத்தியுள்ளார்.
2 thoughts on “புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவில் கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
சர்வதேசத்திற்கு மதிப்பளிப்பவர்களாக இருந்தால் அவர்கள்கள் சிறுபிள்ளைகளை படையில் இணைப்பதையும் தற்கொலை தாக்குதலையும் என்றோ நிறுத்தியிருப்பார்கள். இதுதான் அவர்களின் பலமும்-பலயீனமும்.இது தமிழ் மக்களுக்கு முழுமையாக புரியமறுத்தாலும் சர்வதேசம் முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தனிஈழகனவு என்ற வக்கிரபுத்திக்கும் மக்களை நேசித்தல் என்றஅரசியல் பணிக்கும் உள்ள வேறுபாட்டு வித்தியாசங்களை அனுபவங்களை இலங்கை இந்தியாவின் வரும்காலப் போராட்டத்திற்கு புலிகள் விட்டு செல்லுகிறார்கள். தூக்கிய பாறாங்கல்லுக்குள் நசிபட்டுசிதைந்து போவது தவிர்கமுடியாதது. இதற்கு தமிழ்முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல சிங்களமக்களும் கூடியவிலையைச் செலுத்தி விட்டோம்.
” இவர்கள் தமிழீழம் எனும் பட்டுவேட்டிக் கனவில் இருந்தார்கள்… குடியிருந்த துண்டு நிலமெனும் கோவணமும் களவுபோனது ”
– நன்றி வைரமுத்து –