பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு

Read Time:2 Minute, 59 Second

பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில் கரையோரமாக முன்னேறிவந்த 59வது படையணியுடன் இணைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான வழி அடைக்கப் பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 58வது படையணி தனது மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,300 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர் எனவும், பல கனிஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது. இதனைவிட, பாதுகாப்பு வலயத்தின் கிழக்கு எல்லையான நந்திக்கடல் பகுதியை நோக்கித் தென்பகுதியாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை 4,550 பேரை மீட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் இருபத்தி நான்கு மணித்தியால மீட்பு நடவடிக்கையில் 9,000 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்வதற்கான அனைத்துத் தரை மற்றும் கடல் மார்க்கங்களை இராணுவத்தினர் முடக்கியிருப்பதால் விடுதலைப் புலிகள் பாரிய தற்கொலைக்குத் தயாராகிவருவதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் 3.5 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு

  1. புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
    புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
    யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

    பிற்குறிப்பு
    முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

Leave a Reply

Previous post நெதர்லாந்து, இலங்கைத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்
Next post காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது