மயிலம்பாவெளியில் 4இளைஞர்கள் வெடிபொருட்களுடன் கைது!

Read Time:1 Minute, 25 Second

மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியிலுள்ள மயிலம்பாவெளி பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனை சாவடியில் வெடிப் பொருட்களுடன் 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நகுலேஸ்வரன் சத்தியராஜா விஜிரன் பேரிலாவெளியைச் சேர்ந்த ரங்கநாதன் ஆனந்தராஜா மற்றும் களுவன்கேணியை சேர்ந்த நாகராஜா ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலம்பாவெளியிலுள்ள ரிஎம்விபி அரசியல்கட்சி காரியாலயமொன்றில் தங்கியிருப்பவர்கள் எனக்கூறப்படும் இந்நான்கு இளைஞர்களும் அவசரகால சட்டவிதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வழியாக கூட்டாக வந்து கொண்டிருந்த இந்நபர்களிலொருவரிடமிருந்து 9எம்.எம்.ரகத் துப்பாக்கி ரவைகள் 09கைக்குண்டு 01சீருடை சயனைட் வில்லைகள் 04 என்பன கைப்பற்றப் பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்த புலிகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்..!!!
Next post பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!