புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்.. 12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு

Read Time:2 Minute, 23 Second

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் மற்றும் குப்பிலான்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து படையினர் 12 படகு இயந்திரங்களுடன் பெருந்தொகையான வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இராணுவத்தின் 8ஆம் படையணியினர் கடந்த சனிக்கிழமை ஒரு தொகை வெடி பொருட்களை மீட்டிருந்தனர். இம்மீட்பு நடவடிக்கைகளின் போது புலிகளினால் வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடித்ததில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது. அப்பகுதியிலிருந்து 15 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 01 – எம். பி. எம். ஜி. பெரல்கள், 03 – ரி-56 தோட்டாக்கள், 18 ஆர். பி. ஜி. ரவைகள், 650 புலி கொடிகள், 40 புலிகளின் காற்சட்டைகள், 50 புலிகளின் மேற்சட்டைகள், 150 புலிகளின் தொப்பிகள், 12 படகு இயந்திரங்கள், 01 ஐ. கொம் செட் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை அன்றைய தினமே சுகந்திபுரம் பகுதியிலி ருந்து 01 ஆர். பி. ஜி. ரவை, 25 ரி-56 ரவைகள், 01 கிரனேற் கைக்குண்டு, 03 நிலக்கண்ணிவெடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. குப்பிலான்குளம் பகுதியிலிருந்து 145 டெட்டனேட் டர்கள், ஏழு கிலோகிராம் நிறைகொண்ட சி4 வெடிபொருட்கள், 150 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 246 – 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 800 – ரி 56 ரவைகள் உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான்-தைவானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
Next post முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்க மேலும் 5 நிலையங்களை நிறுவ முடிவு