கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம்
Read Time:1 Minute, 1 Second
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நகரில் இன்றுபிற்பகல் 3மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திகாம்பரம் தலைமை தாங்கினார். சடலமாக மீட்கப்பட்ட 16 மற்றும் 17வயதுடைய இந்த இரு யுவதிகளின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும், அத்துடன் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Average Rating