கே.பி.யின் உதவியாளர் கைது -சிங்கள ஊடகம் தகவல்
புலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு;ள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஆனந்தன் கைதுசெய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிடமுடியாதென அதிகாரிகள் தெரிவித்தனர். கே.பியிடமும் ஆனந்தனிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றியும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது புலிகளுக்கு முகவர்களாக செயற்பட்ட சார்ள்ஸ் ஞானக்கோன், ஜயந்தஞானக்கோன் ஆகிய இரு சகோதரர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் சார்ள்ஸ் ஞானக்கோன் அவுஸ்திரேலியாவிலும் ஜயந்த ஞானக்கோன் கலிபோர்னியாவிலும் இருப்பதாகவும் அந்த சிங்கள நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.
One thought on “கே.பி.யின் உதவியாளர் கைது -சிங்கள ஊடகம் தகவல்”
Leave a Reply
You must be logged in to post a comment.
k.p is a f–ker first kill him…..international Terrorist