தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
Read Time:1 Minute, 16 Second
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த வாகனம் ஒன்று மிரிஹான குற்றத்தடுப்பு பிரிபு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றே இவ்வாறு பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த வாகனம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு கொண்டு வரப்பட்டதாக குற்றம் சுமத்தப்படடு இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating