நலன்புரி நிலையங்களிலுள்ளவர்களை உறவினர்களுடன் அனுப்ப இணக்கம்?

Read Time:2 Minute, 4 Second

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வரும் வன்னி மக்களை அவர்களுடைய உறவினர்கள் பொறுப்பேற்கக்கூடிய ஏற்பாடு ஒன்று குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நலன்புரி நிலையங்களின் வசிப்போர் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்படவேண்டும், அல்லது மீள் குடியேற்றப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே, இதுகுறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நலன்புரி நிலையங்களில் இருப்போரை அவர்களது உறவினர்கள் உரிய ஆதாரங்களைக் காட்டி தம்முடன் அழைத்துச்செல்லும் வழிமுறை ஒன்றை இதன்மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யாழ் குடாநாட்டைச் சொந்த இடமாகக் கொண்டவர்களிடம் அவர்கள் சென்று வசிக்கக்கூடிய பிரதேசங்கள் குறித்த தகவல்களைப் பெற்று, கிராமசேவையாளர்கள்ரூபவ் பிரதேச செயலாளர்கள் மூலம் அவற்றை உறுதிப்படுத்தி அவர்களை அரசாங்கம் விடுவித்திருந்தது. இதேபோன்று, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோரும், பிற மாவட்டங்களில் வசிக்கும் தமது உறவினர்களுடன் இணைந்துகொள்ளக்கூடிய நடைமுறையையே அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளை, நலன்புரி நிலையங்களிலிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடு ஒன்று குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர்தரப்பரீட்சை வினாத்தாளில் இனரீதியான கேள்வி: ஐ.தே.க.
Next post புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களுடனான சந்திப்புக்கு இலங்கை எதிர்ப்பு