வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழப்பு
Read Time:1 Minute, 12 Second
புத்தளம் அநுராதபுரம் வீதியின் கருவெலகஸ்வௌ வீதியில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். புத்தளம் அனுராதபுரம் அதிவேக வீதியின் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். இதன்போது உயிரிழந்தவர் கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 27வயதுடையவர் என்றும், இவரை மோதிய லொறி ஆடை உற்பத்தி நிறுவனமொன்றுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சாரதி கருவெலகஸ்வௌ பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டதுடன், லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Average Rating