வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் மரணத்தில் மர்மம்!

Read Time:1 Minute, 44 Second

கொழும்பு, பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மரணமாகியுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகின்றது. நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியாவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் திருமணம் செய்தவருமான சின்னையா தெய்வேந்திரன் (வயது 30) என்பவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் மரணமானதாக நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டையில் உள்ள அவரது மனைவிக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னர் காலில் ஏற்பட்ட காயம் ஒன்றுக்காக அவரை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பின்னர் அவர் மரணமடைந்துவிட்டார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகக் கூறப்படுவதால், முறைப்படி விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிசாரைக் கேட்கப்பட்டுள்ளது. சடலத்தைப் பெறுப்பேற்பதற்காக அவரது மனைவி கொழும்பு செல்வதற்காக நேற்று முயற்சி எடுத்த போதும், பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் மரணத்தில் மர்மம்!

  1. LTTE killed them.saint army always protect tamils.documented news done by South African press.

Leave a Reply

Previous post திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்து!
Next post தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!