கத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு
கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மத்துகம மனிக்கொட ரப்பர் தோட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. நவுத்துடுவை மாணிக்கொடையைச் சேர்ந்த ஆர். சாந்தினி நயனா (வயது-21) என்னும் அழகிய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு ரப்பர் தோட்ட பகுதியிலிருந்து சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்டுள்ள இந்த இளம் யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் தாதியாக தொழில் புரிந்த பின்னர் ஒன்றரைமாதம் ஆவதாகவும் அடுத்த வாரம் திரும்பவும் மத்திய கிழக்கிற்கு செல்ல இருக்கும் போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக இளம் யுவதியில் வீட்டு அயலவர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் மத்துகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்துகமை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.ஏ. சுந்தரபாலவின் உத்தரவின் பேரில் மத்துகமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சீ) பிரகிதி அபேசிங்க குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ். கழுபோவில உட்பட்ட பொலிஸ்குழு கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Average Rating