பஸ் விபத்தில் ஒருவர் பலி, 18 பேர் காயம்
Read Time:1 Minute, 7 Second
கண்டி பேராதனை வீதியில் இரண்டு பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியுடன் கொழும்பிலிருந்து பிபிலைக்கு சென்ற இ.போ.ச பஸ்வண்டி நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றள்ளது இவ்விபத்தில் தனியார் பஸ் வண்டி ஓட்டுனரான ஒயிஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Average Rating