இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்பு!!
Read Time:1 Minute, 4 Second
இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்டுள்ளனர். இவர் யாழிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றவரென்பது தெரிய வருகின்றது. இந்தியாவுக்கு செல்லவென படகோட்டியிடம் 40ஆயிரம் ரூபா வழங்கியதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே இவர் மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை புலிச் சந்தேகநபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 16 இலங்கை அகதிகள் மண்டபம் முகாமில் இனங்காணப் பட்டுள்ளனர். இவர்களை விசாரணைக்காக சென்னை செங்கல்பட்டு சிறப்புமுகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக த ரைம்ஸ் ஒப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
Average Rating