பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 25பேர் புலிகளிடம் சம்பளம் பெற்றுள்ளனர்
Read Time:1 Minute, 4 Second
பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 25பேர் விடுதலைப்புலிகளிடம் சம்பளம் பெற்றுள்ளனர் என தெரிய வருகிறது புலிகளின் டோசி புலனாய்வுபிரிவுடன் இணைந்து இவர்கள் செயற்பட்டதாகவும் சம்பளத்திற்கு மேலதிகமான வரப்பிரசாதங்களை இவர்கள் புலிகளிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் புதிய தலைவரென தெரிவிக்கப்பட்டு அண்மையில் கைது செய்யப்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புலிகள் அமைப்பினால் மன்னார் ஊடாக போதைப்பொருள் கடத்துவதற்கு சில உயர் இராணுவ அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிய வருகிறது.
Average Rating