முகாம் மக்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்..
Read Time:1 Minute, 18 Second
வடக்கிலுள்ள நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்க வேண்டுமென வலியுறுத்தி இன்றையதினம் தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை திருமாவளவன் எம்.பி தலைமையிலான தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் விடுவிக்கப்படுவதற்கு இந்தியா அதிக முனைப்புக்களைக் காட்ட வேண்டுமெனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் நிலைவரங்களை நன்கு அறிந்திருந்தும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் தமக்குப் புரியவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating